Thursday, November 4, 2010

வந்தனம்...

வந்தனம்...
 
என் நினைவுகளை
வரிகளாக்க களம் தந்த
இணையத்துக்கு ஒரு வந்தனம்...

என் நினைவுகளை
அழகு செய்த
தமிழ் அன்னைக்கும் ஒரு வந்தனம்...

எழுத்தறிவித்த என்
கல்லூரிக்கும்
என் கவி வந்தனம்...

இறுதியில்,
என் சிதறல்களில்
சிலிர்க்க வந்திருக்கும்
என் தோழர்களுக்கும் ஒரு வந்தனம்...

கால ஓட்டத்தில்
என் காதோடு கதை பேசிய,
கற்பனை குவியல்களோடு
காத்திருக்கிறேன் இங்கே...

சொற்பிழை பொருட்பிழை
எவையேனும் கண்டால்
என் விழிகளுக்கு அதை
விடுப்பீராக...
மன்னித்து அதை
மறப்பீராக...

நன்றி...
என்றும் அன்புடன்
 சுகர்னியா 

2010/11/04

3 comments:

  1. வலைப்பதிவு வருகைக்கு வணக்கங்கள்.


    மா.குருபரன்

    ReplyDelete