Thursday, December 30, 2010

சாயி ராம்...


சாயி ராம்... 
( பாடலாக எழுதியது... )

சாயி சாயி சாயி ராம்
சாயி பாபா சாயி ராம் (2)

அன்னையும் நீயே தந்தையும் நீயே
ஆதரிக்கும் அந்த தெய்வமும் நீயே (2)
உன் அடி தேடி வந்தவள் நானே (2)
அணைத்திட வேண்டும் ஐயனே நீயே (2)

சாயி சாயி சாயி ராம்
சாயி பாபா சாயி ராம் (2)

(அன்னையும் நீயே.......)
எங்கு நான் போனாலும்
இங்கு நான் மறைந்தாலும் (2)
உனக்காக வாழ்ந்திருப்பேன் - என்
காலங்கள் தோற்றிருப்பேன்...
கால்கள் தான் கடுத்தாலும்
கண்ணில் நீர் வழிந்தாலும் (2)
உனக்காகக் காத்திருப்பேன் - என்
பூவிழி பூத்திருப்பேன்...
உயிருக்குள் உயிராகி
உறவுக்குப் பொருளாகி
(2)
நினைவுக்குள் முடிசூடி
கனவுக்குள் கருவாகினாய் - என்
கனவுக்குக் கருவாகினாய்...
பாதை தவறாகிப் போனாலும் - உன்
பாசம் வழி நடத்தும் எந்நாளும்...
(2)
வாடினேன் தேடினேன்
ஓடினேன் பாதங்கள் நாடுகின்றேன்
பாபா - உன் பாதங்கள் நாடுகின்றேன்...
சாயி சாயி சாயி ராம்
சாயி பாபா சாயி ராம் (2)

(அன்னையும் நீயே.......)
நேற்றைய பொழுதெல்லாம்
பிரிவாகிப் போனாலும்
(2)
நாளை நான் சேர்ந்திருப்பேன் - உன்
நாமங்கள் பாடி நிற்பேன்...
தொலைவில் நீ இருந்தாலும்
பாராமல் சென்றாலும்
(2)
பக்கத்தில் பார்த்திருப்பேன் - மலர்
பாதங்கள் தாங்கி நிற்பேன்...
அன்புக்கு மொழி தந்த
ஐயனும் நீதானே...
(2)
பக்திக்கு முத்தி தந்த
பார்த்தனும் நீதானே - அந்த
பார்த்தனன் நீதானே...
விதிகள் சதிகள் பல செய்தாலும் - உன்
நாமம் காத்து வரும் எந்நாளும்...
(2)
பூ ஒன்று வாடுது
தேடுது கிளை கொண்ட வேரினையே - அது
கிளை கொண்ட வேரினையே...
சாயி சாயி சாயி ராம்
சாயி பாபா சாயி ராம் (2)
(அன்னையும் நீயே.......)

2010...

பல கனவுகளோடு தொடங்கிய 2010
பல கனவுகளை நிறைவேற்றியும்,
பல கனவுகளை சிதைத்து விட்டும்,
பல கனவுகளை உருவாக்கி விட்டும்,
இனிதே நிறைவேறும் நேரமிது...


நிழல்களும் நிஜங்களும்
மௌனமாய் போராடும் நேரமிது...
நம்பிக்கைகளும் நடப்புகளும்
வேறுபட்டு ஏமாறும் நேரமிது...
கலைகளும் கலாச்சாரங்களும்
காணாமல் போகும் வேளை இது...


கனவுகள் கல்லறைகளான போதும்
கலங்காத எம் நெஞ்சம்  - அந்த
கல்லறைகள் கலைக்கப்பட்ட போது
கலங்கிப் போனதும் இந்தப் பத்தில் தான்...


கடந்து போனவைகள் எப்போதும்
கடந்தவைகள் தான்...
கழிந்த 2010 இல் காணாமல்
போனவைகள், போனவர்கள்
எல்லாம் அத்திவராமாகி
மீண்டும் ஒரு அழகிய
காலம் மலரட்டும் இனி...


அனுபவங்கள் பல தந்த
ஆண்டுக்கு அழகாய்
நன்றி சொல்லிப் பிரிகிறேன்
இரண்டாயிரத்துப்பத்தை...


என்றும் அன்புடன்
சுகர்னியா
(31/12/2010)