Friday, April 1, 2011

அப்பா!!!

அப்பா எனும் அன்பு
கண்விழித்த கனவாய்
கலைந்து சென்றபின்பும் - என்
கண்ணீரைத் தட்டிவிட்டு
கற்பனைக்குள் தேடினேன்...

தேடித் தேடியே மீண்டும்

களைப்பில் கண்ணயர்ந்த போது
கனவுகள் தொடர்ந்தது - ஆனால்
விழித்துப் பார்த்தேன்...
இன்னும் கலையவில்லை என் கனவு...
ஒருவேளை இது
கானல் நீராக இருக்குமோ???


என்றும் அன்புடன்
சுகர்னியா

(2010/01/02)

No comments:

Post a Comment