Friday, April 1, 2011

நன்றி...

ஆயிரம் தடவைகள்
தவறாது முயன்றும் - என்
தொண்டைக்குழிக்குள்ளேயே
தோற்றுப்போகுதே - இந்த
"நன்றி " என்ற ஒற்றை வார்த்தை...


வார்த்தைகள் சிறுமைப்படுத்தி
விடுமோ என்று ஒரு பக்கம் - இந்த
ஒற்றை வார்த்தை நம் நட்பை
குறைத்துக்காட்டுமோ என்று இன்னொரு பக்கம்,
நன்றி மட்டும் போதுமா என்று மறு பக்கம்,
போராடும் என் நெஞ்சின் ஓசைகள் - என்
பேனா வழி கசிந்து - உங்கள்
கண்களை ஸ்பரிசிக்க
காத்திருக்கிறது தோழிகளே...


அழகிய மலராக,
அன்பு மொழியாக,
நறுமணமாக, இன்சுவையாக,
இறுதியில் நல்ல நண்பர்களாக -
கடவுள் எம்மை தழுவுவாராம்
சித்தர்கள் சொன்னார்கள்.
ஆம் - என்னையும் கடவுள் தழுவியிருக்கிறார்
என் நண்பிகள் ஊடாக...


கண்களில் கசியும் என்
கண்ணீருக்கு - பேராறுதல்
சொல்லும் - என் தலையணை...
அது தலையணை அல்ல - எனக்கு
எதற்கும் இணையே இல்லா
பெரும் அரவணை(ப்பு) - என்று
புரியுமா அதற்கு???


ஊடல்கள் எமை அப்பப்போ தழுவினாலும்
கூடல்கள் எமை ஆங்காங்கே வருடிவிட,
காலமிட்ட கட்டளைப்படி
கலைந்து செல்லும் நேரம்
கண்ணெதிரே இருந்தாலும்,
என்றும் எம் மனத்தால்
ஒன்றுபட்டிருக்க - ஒவ்வொரு
நிமிசமும்
பொக்கிஷம் தான் நமக்கு...


என்ன சொல்வது???
இதுவும், இன்றைய நாளும்
கூட ஒரு பொக்கிஷம் தான்... ஆனாலும்
இப்போதும் தோற்றுவிட்டேன்
என் நன்றிகளை சொல்லிவிட...
அன்பில் தோற்பவன் தானாம்
வெற்றியாளன்... அதனால் இங்கு
தோல்வியும் வெல்கிறதாய்
சில கனவுகள் என்னுள்ளே...
நிஜமாக்க நீங்கள் வருவீர்கள் என்று...
நன்றி


2011/04/01

1 comment: