Thursday, December 30, 2010

2010...

பல கனவுகளோடு தொடங்கிய 2010
பல கனவுகளை நிறைவேற்றியும்,
பல கனவுகளை சிதைத்து விட்டும்,
பல கனவுகளை உருவாக்கி விட்டும்,
இனிதே நிறைவேறும் நேரமிது...


நிழல்களும் நிஜங்களும்
மௌனமாய் போராடும் நேரமிது...
நம்பிக்கைகளும் நடப்புகளும்
வேறுபட்டு ஏமாறும் நேரமிது...
கலைகளும் கலாச்சாரங்களும்
காணாமல் போகும் வேளை இது...


கனவுகள் கல்லறைகளான போதும்
கலங்காத எம் நெஞ்சம்  - அந்த
கல்லறைகள் கலைக்கப்பட்ட போது
கலங்கிப் போனதும் இந்தப் பத்தில் தான்...


கடந்து போனவைகள் எப்போதும்
கடந்தவைகள் தான்...
கழிந்த 2010 இல் காணாமல்
போனவைகள், போனவர்கள்
எல்லாம் அத்திவராமாகி
மீண்டும் ஒரு அழகிய
காலம் மலரட்டும் இனி...


அனுபவங்கள் பல தந்த
ஆண்டுக்கு அழகாய்
நன்றி சொல்லிப் பிரிகிறேன்
இரண்டாயிரத்துப்பத்தை...


என்றும் அன்புடன்
சுகர்னியா
(31/12/2010)

2 comments: